உள்ளூர் செய்திகள்
- விளையாட்டு மைதானம் அருகே ராஜாஜி நகரில் சென்று கொண்டிருந்தார்.
- சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்துள்ள பெத்ததாளப்பள்ளி காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன். இவர் நேற்று இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி விளையாட்டு மைதானம் அருகே ராஜாஜி நகரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.