உள்ளூர் செய்திகள்

நெல்லை அருகே வழிகேட்பது போல் நடித்து பெண்ணிடம் ரூ.21 ஆயிரம் பறிப்பு

Published On 2023-04-21 14:35 IST   |   Update On 2023-04-21 14:35:00 IST
  • அன்னலட்சுமி ஒரு மகளிர் சுய உதவி குழுவில் தலைவியாக உள்ளார்.
  • ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் அன்னலட்சுமியிடம் வழி கேட்பது போல் நடித்து அவர் வைத்திருந்த கைப்பையை பறித்து சென்றனர்.

நெல்லை:

நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் ஆரைகுளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் இசக்கியப்பன். இவரது மனைவி அன்னலட்சுமி (வயது 55). இவர் ஒரு மகளிர் சுய உதவி குழுவில் தலைவியாக உள்ளார்.

நேற்று சுய உதவி குழு உறுப்பினர்களிடம் இருந்து பணத்தை வசூல் செய்து கொண்டு அடைமிதிப்பான்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் அன்னலட்சுமியிடம் வழி கேட்பது போல் நடித்து அவர் வைத்திருந்த கைப்பையை பறித்து சென்றனர். அந்த பையில் ரூ.21 ஆயிரம் பணம் இருந்தது. இதுகுறித்து அன்னலட்சுமி அளித்த புகாரின் பேரில் முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பணத்தை பறித்து சென்ற நபர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News