உள்ளூர் செய்திகள்

நெல்லிக்குப்பம் அருகே பரபரப்பு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் நகை -பணம் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை

Published On 2023-07-26 09:35 GMT   |   Update On 2023-07-26 09:35 GMT
  • சரவணன் மற்றும் அவரது மனைவி தங்களது குழந்தைகளை பார்த்துவிட்டு இன்று காலை மீண்டும் வீட்டுக்கு வந்தனர்.
  • காரின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர்.

கடலூர்:

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த பாலூரை சேர்ந்தவர் சரவணன். (வயது 48). அ.தி.மு.க.முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவரது மனைவி சுதா பாலூர் சன்னியாசி பேட்டை ஊராட்சி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சரவணன் குழந்தைகள் நெய்வேலியில் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இதன் காரணமாக சரவணன் மற்றும் அவரது மனைவி தங்களது குழந்தைகளை பார்த்துவிட்டு இன்று காலை மீண்டும் வீட்டுக்கு வந்தனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் முன்பக்க இரும்பு கதவு மூடி இருந்த நிலையில் மரக்கதவு உடைந்து திறந்து இருந்தது. இதனைத் தொடர்ந்து சரவணன் மற்றும் அவரது மனைவி உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் முழுவதும் சிதறி கிடந்தது. பின்னர் அறைக்குள் சென்று பார்த்தபோது பீரோ கதவு உடைந்து இருந்தது.

மேலும் பீரோவில் இருந்த 3 1/4 தங்க நகை மற்றும் ஒரு லட்சம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் 2.50 லட்சம் ஆகும். மேலும் காரின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர். இத்தகவல் அறிந்த நடுவீரப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடவியில் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லிக்குப்பம் அருகே அ.தி.மு.க.முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் நகை, பணம் திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News