உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு கட்டுரை போட்டிகள் நடைபெற்றது.

தஞ்சையில், மாணவர்களுக்கு கட்டுரை போட்டி

Published On 2023-10-21 10:25 GMT   |   Update On 2023-10-21 10:25 GMT
  • ஓவியம் வரைதல், வினாடி-வினா போட்டிகள் நடைபெற்றது.
  • வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

தஞ்சாவூர்:

தஞ்சையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான பேச்சு, கட்டுரை, ஓவியம் வரைதல்,வினாடி-வினா போட்டிகள் நடை பெற்றது.

250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனா. இந்த போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தொடங்கிவைத்தார்.முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், தனியார் பள்ளி டி.இ.ஓ. அமலா தங்கதாய், கமலா சுப்பிரமணியம் முதல்வர்தெய்வபாலன், ஜேக்கப், வினோத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News