உள்ளூர் செய்திகள்

சென்னிமலையில் குடிசையில் தீ விபத்து

Published On 2023-11-01 10:21 GMT   |   Update On 2023-11-01 10:21 GMT
  • குடிசை வீட்டில் திடீரென தீ பிடித்தது.
  • தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீ பரவாமல் தடுத்தனர்.

சென்னிமலை:

சென்னிமலை பேரூராட்சிக்குட்பட்ட அறச்சலூர் ரோட்டில் அம்மாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு எதிரில் உள்ள ஒரு குடிசை வீட்டில் திடீரென தீ பிடித்தது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் சென்னிமலை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீச்சி அடித்து மேலும் தீ பரவாமல் தடுத்தனர்.

இந்த தீ விபத்தில் சில பொருட்கள் எரிந்துள்ளது.

யாரோ புகை பிடிப்பதற்காக பற்ற வைத்த தீயை அணைக்காமல் சென்றதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News