உள்ளூர் செய்திகள்

அரசின் நலத்திட்ட உதவிகளை பெற பதிவு செய்யலாம்

Published On 2022-07-15 08:23 GMT   |   Update On 2022-07-15 08:23 GMT
  • கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள 18 முதல் 60 வயதுக்கு உட்பட்ட தொழிலாளர்கள் பதிவு செய்து அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெறலாம்.
  • தமிழ்நாடு பனை மர தொழிலாளர்கள் நலவாரியத்தில் www.tnuwwb.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பித்து உறுப்பினராக பதிவு செய்யலாம்.

ஈரோடு:

தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் சமூக பாதுகாப்பு நலவாரியத்தில் 18 வகையான தொழிலாளர் நலவாரியங்கள் செயல்படுகிறது.

இதில் பல்வேறு வகையான கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள 18 முதல் 60 வயதுக்கு உட்பட்ட தொழிலாளர்கள் பதிவு செய்து அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெறலாம்.பனை மரம் சார்ந்த தொழிலாளர்கள், தமிழ்நாடு பனை மர தொழிலாளர்கள் நலவாரியத்தில் www.tnuwwb.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பித்து உறுப்பினராக பதிவு செய்யலாம்.

5 ஆண்டுக்கு ஒரு முறை உறுப்பினர் பதிவை புதுப்பிக்க வேண்டும். உறுப்பினர்களுக்கு திருமணம், மகப்பேறு, குழந்தைகளுக்கு கல்வி நிதி உதவி, கண் கண்ணாடி, நியமனதாரருக்கு இயற்கை மரணம் மற்றும் விபத்து மரண உதவித்தொகை, 60 வயது நிறைவு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் போன்றவை வழங்கப்படும்.

ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைபேசி எண், அசல் ஆதார் அட்டை, அசல் ரேஷன்கார்டு, பாஸ்போர்ட் அளவு போட்டோ, வங்கி கணக்கு புத்தகம், வயதுக்கான ஆவணங்களை www.tnuwwb.in என்ற இணைய தளம் மூலம் பதிவு செய்யலாம்.

கூடுதல் விபரத்தை, 0424 2275591, 2275592 என்ற எண்ணில் அறியலாம். இந்த தகவலை தொழி லாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முருகேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News