உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தற்கொலை

Published On 2022-10-08 13:47 IST   |   Update On 2022-10-08 13:47:00 IST
  • லட்சுமணசாமி மதுவிற்கு அடிமையாகி வயிற்று வலி தாங்க முடியாமல் இருந்த காரணத்தினால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • இது குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொடுமுடி:

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள பாசூர் செங்கோடம் பாளையத்தை சேர்ந்த லட்சுமணசாமி (49). கூலி தொழிலாளி.

இவரது மனைவி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்து விட்டதால் மதுவுக்கு அடிமையாகி இவரது மகன் கமலக்கண்ணன் உடன் தங்கி இருந்து வருகிறார்.

உடலை கமலக்கண்ணன் தனது மாமியார் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று விட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த லட்சுமணசாமி மதுவிற்கு அடிமையாகி வயிற்று வலி தாங்க முடியாமல் இருந்த காரணத்தினால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மலையம்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் அடிப்படையில் போலீசார் நேரில் சென்று உடலை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News