உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2023-04-11 09:48 GMT   |   Update On 2023-04-11 09:48 GMT
  • துரைசாமி தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
  • சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையம், பட்டத்தரசி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த வர் துரைசாமி (48). இவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு விஜய் என்ற மகன் உள்ளார்.

துரைசாமி மற்றும் பழனி யம்மாள் கூலி வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் துரை சாமிக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வருடமாக அவர் வயிற்று வலியால் அவதி ப்பட்டு அதற்காக நாட்டு மருந்து சாப்பிட்டு வந்ததா கவும் ஆனால் வயிற்று வலி குணமா கவில்லை என கூறப்படுகிறது.

வயிற்று வலி வரும்போ தெல்லாம் துரைசாமி செத்துவிடலாம் என்று புலம்பி வந்துள்ளார். அவருக்கு அவரது குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்தனர்.

இந்நிலையில் சம்பவ த்தன்று இரவு துரைசாமி, பழனியம்மாள், விஜய் 3 பேரும் சாப்பிட்டனர் .பின்னர் பழனியம்மாள் அவரது மகன் விஜய் வீட்டுக்குள் தூங்க சென்று விட்டனர். துரைசாமி வீட்டின் வெளியே தூங்க சென்றார்.

இரவில் திடீரென ஏதோ சத்தம் கேட்க திடுக்கிட்டு எழுந்த பழனியம்மாள் கதவைத் திறக்க முயன்றார். ஆனால் கதவு வெளிப்பக்கம் தாழ் போடப்பட்டிருந்தது.

உடனடியாக விஜய் அவரது நண்பருக்கு போன் செய்து தகவல் சொன்னார் . அவரது நண்பரும் விரைந்து வந்து கதவை திறந்தார். பழனியம்மாள், விஜய் வெளியே வந்து பார்த்த போது துரைசாமி தூக்குபோட்டு தொங்கி கொண்டி ருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவரை மீட்டு கார் மூலம் சத்திய மங்கலம் அரசு மருத்து வமனைக்கு சிகிச்சை க்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வரும் வழியிலேயே துரைசாமி இறந்துவிட்டதாக தெரிவித்த னர்.

இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News