உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2023-03-10 09:46 GMT   |   Update On 2023-03-10 09:46 GMT
  • ரத்தினசாமி வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
  • கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கொடுமுடி கொளத்துப்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் ரத்தினசாமி (35). இவரது மனைவி தீபா (27). ரத்தினசாமி தேங்காய் நார் உறிக்கும் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன் ரத்தினசாமிக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு வலிப்பு நோயும் உள்ளதாக தெரிகிறது.

இதனால் மன உளைச்சலுடன் காணப்பட்ட ரத்தினசாமி, சம்பவத்தன்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இதையறிந்த அவரது சகோதரர், கொடுமுடி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில் கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News