உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2023-03-07 07:39 GMT   |   Update On 2023-03-07 07:39 GMT
  • பிரகாஷை அவரது மனைவி கண்டித்துள்ளார்.
  • மனவேதனை அடைந்த பிரகாஷ் வீட்டின் அறையில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.

ஈரோடு:

ஈரோடு செங்கோடம் பாளையம் ராஜீவ்நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (45). தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி மீனா (28). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். பிரகாசுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு இதய கோளாறு ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்றார். அதன்பிறகு டாக்டர்கள் மது அருந்தக்கூடாது என்று அறிவுரை வழங்கினார்கள்.

ஆனால் பிரகாஷ் மது குடிக்கும் பழக்கத்தில் இருந்து மீள முடியாமல் தவித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு பிரகாஷ் மது குடித்துவிட்டு வீட்டுக்கு சென்றார்.

அப்போது பிரகாஷை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதில் மனவேதனை அடைந்த பிரகாஷ் வீட்டின் அறையில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.

உடனே மீனா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிரகாஷை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோ தித்து விட்டு பிரகாஷ் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Tags:    

Similar News