உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2023-01-13 09:42 GMT   |   Update On 2023-01-13 09:42 GMT
  • தனது மனைவி மற்றும் மகள் இறந்து போன துக்கத்தில் ஞானராஜ் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
  • வீட்டில் சேலையால் தூக்கில் தொங்கி கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

டி.என்.பாளையம்:

டி.என்.பாளையம் வனச்சாலை ரோடு 4-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் ஞானராஜ் (50). கூலி தொழிலாளி. இவரது மனைவி மரகதம். இவர்களுக்கு ரேணு என்ற மகளும், நவீன்குமார் என்ற மகனும் உள்ளனர்.

இதில் மகள் ரேணு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்து விட்டார். ஞானராஜின் மனைவி மரகதம் தி.மு.க.வில் வார்டு கவுன்சிலராக இருந்தவர்.

இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். இதனையடுத்து ஞானராஜ் தனது மகன் நவீன்குமார் உடன் வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் தனது மனைவி மற்றும் மகள் இறந்து போன துக்கத்தில் ஞானராஜ் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று காலை பெயிண்டிங் வேலைக்கு சென்ற நவீன்குமார் இரவு வீடு திரும்பி வந்து பார்க்கும் போது தந்தை ஞானராஜ் வீட்டில் சேலையால் தூக்கில் தொங்கி கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே ஞானராஜை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோ தனை செய்த டாக்டர் ஏற்கனவே ஞானராஜ் இறந்து விட்டதாக கூறினர்.

இதனையடுத்து ஞானராஜ் உடல் பிரேத பரிசோதனை க்காக கோபி அரசு மருத்துவ மனையில் வைக்கப்பட்டு உள்ளது.

இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவி, மகள் இறந்து போன துக்கத்தில் இருந்த ஞானராஜ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News