உள்ளூர் செய்திகள்

லாரி மோதி பெண் பலி

Published On 2022-09-16 10:04 GMT   |   Update On 2022-09-16 10:04 GMT
  • சென்னிமலை-பெருந்துறை ரோடு வண்ணாம்பாறை பிரிவு என்ற இடத்தில் திரும்பும் போது அந்த வழியாக குழாய்கள் ஏற்றி வந்த ஒரு லாரி அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
  • இதில் நாகராஜ் மற்றும் மகேஸ்வரி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

 சென்னிமலை அருகே உளள் முகாசிபிடாரியூர் 1010 நெசவாளர் காலனியை சேர்ந்தவர் வீரமணி. இவரு டைய மனைவி மகேஸ்வரி (61). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு விசைத்தறி கூடத்தில் பாவு நூல் பிணைக்கும் வேலை செய்து வந்தார்.

வேலை முடிந்த பிறகு மகேஸ்வரி அதே பட்ட றையில் தறி மேஸ்திரியாக வேலை பார்க்கும் சென்னி மலை அருகே கொத்த ம்பாளையத்தை சேர்ந்த நாகராஜ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டி ருந்தார்.

அப்போது சென்னிமலை-பெருந்துறை ரோடு வண்ணாம்பாறை பிரிவு என்ற இடத்தில் திரும்பும் போது அந்த வழியாக குழாய்கள் ஏற்றி வந்த ஒரு லாரி அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் நாகராஜ் மற்றும் மகேஸ்வரி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் சிகிச்சை பலனி ன்றி மகேஸ்வரி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.

Tags:    

Similar News