உள்ளூர் செய்திகள்
ஒப்பந்த ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் வாபஸ்
- தூய்மை பணியாளர்கள் முழு தொகை ஊதியமாக வழங்கவும் கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- இந்நிலையில் ஒப்பந்த முழு ஊதியம் வழங்க ஏற்று கொண்டதால் காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெற்றனர்.
ஈரோடு:
ஈரோடு அரசு மருத்துவ மனையில் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் 132 தூய்மை பணியாளர்கள், காவல் பணியா ளர்கள் என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் .
இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் வழங்கும் தினக்கூலி, 707 ரூபாய் வழங்காமல், 310 ரூபாயை வழங்குகின்றனர். இதுபற்றி புகார் தெரிவித்த 16 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு மீண்டும் பணி வழங்கவும், முழு தொகை ஊதியமாக வழங்கவும் கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று ஒப்பந்த நிறுவனம், ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கம், மருத்துவ துறை அலுவலர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்கவும், முழு ஊதியம் வழங்கவும் ஒப்பந்த நிறுவனம் ஏற்று கொண்டதால் காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெற்றனர்.