உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி விவசாயி பலி

Published On 2023-10-14 07:51 GMT   |   Update On 2023-10-14 07:51 GMT
  • வேன் ஒன்று ராமசாமி ஓட்டி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் மீது மோதியது.
  • அறச்சலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அறச்சலூர்:

அறச்சலூர் அருகே உள்ள பச்சாகுட்டையை சேர்ந்தவர் ராமசாமி (55). விவசாயி.

இவர் தனது ஊரான பச்சாக்குட்டையில் இருந்து பள்ளியூத்து செல்லும் ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே குளிர்பானங்கள் ஏற்றிக்கொண்டு மண்கரட்டை நோக்கி சென்றுகொண்டிருந்த வேன் ஒன்று ராமசாமி ஓட்டி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் மீது மோதியது.

இந்த சம்பவத்தில் ராமசாமிக்கு பலத்த அடிபட்டது. அக்கம் பக்கம் இருந்தவர்கள் ராமசாமியை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ராமசாமி இறந்தார். இச்சம்பவம் குறித்து அறச்சலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News