உள்ளூர் செய்திகள்

மஞ்சள் குவிண்டால் ரூ.14 ஆயிரத்து 499-க்கு விற்பனை

Published On 2023-11-30 07:30 GMT   |   Update On 2023-11-30 07:30 GMT
  • விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.14 ஆயிரத்து 499-க்கு விற்பனையானது.
  • இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஈரோடு:

ஈரோடு மஞ்சள் சந்தை யில் கடந்த ஜூலை முதல் மஞ்சள் விலை உயரத் தொடங்கியது. குவிண்டால் ரூ.10 ஆயிரத்துக்கு கீழ் விற்பனையாகி வந்த மஞ்சள் விலை ரூ.14 ஆயிரத்தை தொட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் மஞ்சள் விலை ரூ.15 ஆயிரத்து 422-க்கு விற்பனையானது. 13 ஆண்டுகளுக்கு பிறகு மஞ்சள் விலை ரூ.15 ஆயிரத்தை கடந்து உச்ச த்தை தொட்டது. தொடர்ந்து மஞ்சள் விலையில் சரிவு ஏற்பட்டு ரூ.12 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரம் வரை விற்பனையானது.

இந்நிலையில் கோபி கூட்டுறவு சங்கத்தில் நேற்று நடந்த ஏலத்தில் விரலி மஞ்சள் அதிகபட்சமாக குவிண்டால் ஒரு ரூ.14 ஆயிரத்து 499-க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த விலை உயர்வு மற்ற சந்தைகளில் எதிரொலிக்கவில்லை என்றாலும் வரும் காலங்களில் மஞ்சள் விலை உயரும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது.

பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு 878 மூட்டை மஞ்சள் வரத்தான நிலையில் 797 மூட்டைகள் விற்பனையானது. விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.9,192 முதல் ரூ.13 ஆயிர த்து 569, கிழங்கு மஞ்சள் ரூ.8,599 முதல் ரூ.11,889 வரை விற்பனையானது.

ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு 2397 மூட்டை மஞ்சள் வரத்தான நிலையில் 1,050 மூட்டைகள் விற்பனையானது. விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.8,589 முதல் ரூ.13 ஆயிரத்து 589, கிழங்கு மஞ்சள் ரூ.7,599 முதல் ரூ.11,913 வரை விற்பனையானது.

ஈரோடு கூட்டுறவு சங்கத்துக்கு 382 மூட்டை மஞ்சள் வரத்தான நிலையில் 264 மூட்டைகள் விற்பனையானது. விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.7,189 முதல் ரூ.13 ஆயிரத்து 600, கிழங்கு மஞ்சள் ரூ.6,879 முதல் ரூ.12,200 வரை விற்பனையானது.

Tags:    

Similar News