உள்ளூர் செய்திகள்

வ.உ.சி மார்க்கெட்டில் தக்காளி விலை குறைந்தது

Published On 2022-06-21 09:41 GMT   |   Update On 2022-06-21 09:41 GMT
  • சமீபகாலமாக தக்காளி விலை கூடுவதும் குறைவதுமாக நிலையற்ற தன்மையுடன் இருந்து வருகிறது.
  • ஈரோடு வ.உ.சி. பூங்கா மார்க்கெட்டுக்கு 30 டன் தக்காளி விற்பனைக்கு வந்தது. இதனால் தக்காளி விலை குறைந்தது.

ஈரோடு:

ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் ஆந்திரா, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், தாளவாடி போன்ற பகுதிகளில் இருந்து தக்காளி அதிக அளவில் விற்பனைக்கு வந்தது. தினமும் 15 டன் தக்காளி லோடு ரத்தாகி வந்தது.

இந்நிலையில் சமீபகாலமாக தக்காளி விலை கூடுவதும் குறைவதுமாக நிலையற்ற தன்மையுடன் இருந்து வருகிறது. கடந்த வாரம் வ.உ.சி. மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.35-க்கு விற்பனையானது. இந்திலையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக தக்காளி விலையும் அதிகரித்துள்ளது.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி வரத்து குறைய தொடங்கியது தக்காளி விலை அதிகரித்து ஒரு கிலோ ரூ.50-க்கு விற்பனையானது.

இந்நிலையில் இன்று மார்க்கெட்டில் தக்காளி வரத்து அதிகரித்தது. இன்று கிருஷ்ணகிரி, ஆந்திரா, குப்பம் போன்ற பகுதியில் இருந்து எப்போதும் இல்லாத அளவாக 30 டன் தக்காளி விற்பனைக்கு வந்தது. இதனால் தக்காளி விலை குறைந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.30-க்கு பெற்றது. சுமாரான தக்காளி ரூ.25-க்கு விற்பனையானது.

Tags:    

Similar News