உள்ளூர் செய்திகள்

2 தனியார் பஸ்கள் இடையே நேர தகராறு

Published On 2022-08-27 11:03 GMT   |   Update On 2022-08-27 11:03 GMT
  • பஸ் நிலையம் முன்பு பஸ்கள் வெளியே செல்ல முடியாமல் தனியார் பஸ்கள் குறுக்கே இருந்ததால் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
  • இந்த சம்பவத்தால் சென்னிமலை பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னிமலை:

ஈரோட்டிலிருந்து சென்னிமலை வழியாக 2 தனியார் பஸ்கள் பழனி செல்கிறது. இந்த தனியார் பஸ்கள் இன்று காலை பழனியில் எடுத்து சென்னி மலை வரும்பொழுது 2 பஸ் கண்டக்டர், டிரைவர் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

ஒரு தனியார் பஸ் பழனியில் இருந்து காலை 6.20 மணிக்கு எடுத்து சென்னிமலை பஸ் நிலையத்துக்கு 8.50-க்கு வரவேண்டும். அதேபோல் மற்றொரு பஸ் பழனியில் இருந்து காலை 6.25 மணிக்கு புறப்பட்டு சென்னிமலை பஸ் நிலையத்திற்கு 8.55 மணிக்கு வர வேண்டும்.

ஆனால் இன்று காலை அந்த பஸ் 8:48 மணிக்கு சென்னிமலை பஸ் நிலையம் வந்துவிட்டது. அதன் பின்பு வந்த மற்றொரு பஸ் முன்கூட்டி வந்த பஸ் முன்பு குறுக்கே போட்டு எப்படி முன்பு வரலாம் என டிரைவர், கண்டக்டரிடம் இருவரும் தகராறு செய்தனர். காலை நேரமாதலால் பொதுமக்கள் அதிகளவில் இருந்ததால் பெரும் கூட்டம் கூடியது.

பஸ் நிலையம் முன்பு பஸ்கள் வெளியே செல்ல முடியாமல் தனியார் பஸ்கள் குறுக்கே இருந்ததால் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த சென்னிமலை போலீசார் 2 பஸ் டிரைவர், கண்டக்டர்களையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தால் சென்னிமலை பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News