ஈரோட்டில் இன்று மாலை த.மா.கா. பொதுக்கூட்டம் - ஜி.கே.வாசன் எம்.பி. பங்கேற்பு
- த.மா.கா. சார்பில் இன்று மாலை காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
- பொதுக்கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. தலைமை தாங்குகிறார்.
ஈரோடு:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி காமராஜரின் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு திண்டல் அடுத்த வேளாளர் மருத்துவமனை வளாகத்தில் பிரம்மாண்ட முறையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று மாலை காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பொதுக்கூட்டத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. தலைமை தாங்குகிறார்.
பொதுக்கூட்டத்திற்காக வேளாளர் மருத்துவமனை வளாகத்தில் பிரம்மாண்டமாக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. த.மா.கா. கட்சி கொடிகள் கட்டப்பட்டுள்ளன.
பொதுக்கூட்டத்தையொட்டி இளைஞர் அணி சார்பில் காமராஜர் ஜோதி விருதுநகரில் இருந்தும், மாணவரணி சார்பில் மூப்பனார் ஜோதி தஞ்சையில் இருந்தும் கொண்டு வரப்படுகிறது. அதனை ஜி.கே.வாசன் எம்.பி. பெற்றுக்கொள்கிறார்.