உள்ளூர் செய்திகள்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100.95 அடியாக குறைந்தது

Published On 2022-10-07 07:04 GMT   |   Update On 2022-10-07 07:04 GMT
  • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100.95 அடியாக உள்ளது.
  • அணைக்கு வினாடிக்கு 594 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் கொள்ளளவு 105 அடி ஆகும். அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது.

நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்த–தால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100.95 அடியாக உள்ளது.அணைக்கு வினாடிக்கு 594 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

பாசனத்திற்காக கீழ் பவானி வாய்க்காலில் 2,300 கன அடி, காலிங்கராயன் பாசனத்திற்கு 300 கன அடி என மொத்தம் 2,600 கனஅடி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. 

Tags:    

Similar News