உள்ளூர் செய்திகள்

மயங்கி கிடந்த பெண் சாவு

Published On 2023-02-25 09:28 GMT   |   Update On 2023-02-25 09:28 GMT
  • மங்களம் வீட்டின் படுக்கை அறையில் மயங்கிய நிலையில் கிட ந்தார்.
  • கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோபி:

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வேட்டை காரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் மங்களம் (வயது 46). இவர் அந்த பகுதியில் தங்கி ஒரு தனியார் கம்பெனி யில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் மங்களம் வீட்டின் படுக்கை அறையில் மயங்கிய நிலையில் கிட ந்தார்.

இதை கண்ட அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News