உள்ளூர் செய்திகள்

ஈரோடு ஜவுளி சந்தை வெறிச்சோடியது

Published On 2023-11-28 09:29 GMT   |   Update On 2023-11-28 09:29 GMT
  • இன்று கூடிய ஜவுளி சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் ஓரளவு வந்திருந்தனர்.
  • மொத்த வியாபாரம் 40 சதவீதம் நடைபெற்றது.

ஈரோடு:

ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே தினசரி ஜவுளி சந்தை வார ஜவுளி சந்தை நடைபெற்று வருகிறது. திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை வாரச்சந்தை விடிய விடிய நடைபெற்று வருகிறது.

வார ஜவுளி சந்தை தென்னிந்திய அளவில் புகழ்பெற்றது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து மொத்த துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழை பரவலாக பெய்து வருவதால் ஜவுளி சந்தை வியாபாரம் மந்த நிலையில் நடைபெற்று வந்தது.

கடந்த வாரம் வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை. இதனால் மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்டது.

ஆனால் இன்று கூடிய ஜவுளி சந்தையில் ஆந்திரா, தெலுங்கானா, கேரளா வியாபாரிகள் ஓரளவு வந்திருந்தனர். இதனால் மொத்த வியாபாரம் 40 சதவீதம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் இன்று வியாபாரிகள் வரவில்லை. இதனால் வியாபாரம் மந்த நிலையில் நடைபெற்றது.

உள்ளூர் வியாபாரிகளும் வராததால் ஜவுளி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. எனினும் நாளாக நாளாக வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

இதேபோல் சென்ட்ரல் தியேட்டர் பகுதியிலும், பி.பி. அக்ரஹாரம் பகுதியிலும் ஜவுளி சந்தை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News