உள்ளூர் செய்திகள்

கழிவு நீர் கொட்ட வந்த லாரியை சிறை பிடித்த பொதுமக்கள்

Published On 2023-11-18 13:10 IST   |   Update On 2023-11-18 13:10:00 IST
  • செப்டிக் டேங்க் கிளினிக் லாரி ஒன்று கழிவு நீரை கொட்ட வந்துள்ளது.
  • போலீசார் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி லாரியை மீட்டு வந்தனர்.

பெருந்துறை:

பெருந்துறை ஒன்றியம், கம்புளியம்பட்டி கிராமத்தில், நாகப்பகவுண்டன்பாளையம்புதூர் செல்லும் சாலையின் ஓரத்தில் தனியாருக்கு சொந்தமான செப்டிக் டேங்க் கிளினிக் லாரி ஒன்று கழிவு நீரை கொட்ட வந்துள்ளது.

இதை அவ்வழியாக சென்ற கிராமத்து மக்கள் சிலர் பார்த்து லாரியை பிடித்து வைத்து விட்டு பெருந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி லாரியை மீட்டு வந்தனர்.

Tags:    

Similar News