உள்ளூர் செய்திகள்

கழிப்பறை கழிவுகளை கொட்டிய லாரி சிறை பிடிப்பு

Published On 2022-11-17 09:29 GMT   |   Update On 2022-11-17 09:29 GMT
  • டேங்கர் லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
  • தொடர்ந்து லாரி ஓட்டி வந்த ஓமலூரை சேர்ந்த சேதுபதி என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னிமலை:

சென்னிமலை யூனியன் ஈங்கூர் ஊராட்சிக்கு உட்பட்ட செங்குளம் குளத்தோட்டம் என்ற இடத்தில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.

இந்த இடத்தில் அப்பகுதியில் சிறிய டேங்கர் லாரி ஒன்று வந்தது. அந்த லாரியில் லாரி டிரைவர் எங்கோ சேகரித்த கழிப்பறை கழிவுகளை சாலையோரம் கொட்டுவதை அப்பகுதி மக்கள் பார்த்தனர்.

இதையடுத்து அந்த டேங்கர் லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை ஓரத்தில் கழிப்பறை கழிவுகளை கொட்டிய லாரியினை போலீஸ் நிலையத்துக்கு எடுத்து சென்றனர்.

தொடர்ந்து லாரி ஓட்டி வந்த ஓமலூரை சேர்ந்த சேதுபதி என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News