உள்ளூர் செய்திகள்

வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணிப்பு

Published On 2023-10-19 09:12 GMT   |   Update On 2023-10-19 09:12 GMT
  • வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணித்து வருகிறார்கள்.
  • வாகன ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்தனர்.

அரச்சலூர்:

அரச்சலூர் அருகே மலையை ஒட்டியுள்ள ஓம் சக்தி நகரில் சண்முகசுந்தரம் என்ற விவசாயின் தொழு வத்தில் கட்டியிருந்த 7 மாத கன்று குட்டியை அடை யாளம் தெரியாத மர்ம விலங்கு ஒன்று இழுத்து சென்றது.

இது குறித்து தனது தொழுவத்திற்கு விவசாயி சண்முக சுந்தரம் வந்தார். அப்போது கன்று குட்டியை மர்ம விலங்கு தூக்கி சென்றது தெரிய வந்தது.

இந்த சம்பவம் குறித்து அரச்சலூர் வனத்துறை யினருக்கு தகவல் அளித்த தின் பேரில் அங்கு சென்ற வனத்துறையினர் மர்ம விலங்கின் நடமாட்டம் குறித்து அறிந்து கொள்ள அங்கு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனர்.

மேலும் அந்த மர்ம விலங்கை பிடிக்க அந்த பகுதியில் வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணித்து வருகிறார்கள்.

இதை தொடர்ந்து வனத்து றையினர் அரச்சலூர் பகுதியில் வாகன ஒலிபெருக்கி மூலம் இரவில் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என எச்சரிக்கை செய்தனர்.

இதனால் அறச்சலூர் பகுதி யில் பரபரப்பு ஏற்பட்டு ள்ளது. இந்த நிலையில் அறச்சலூரை சேர்ந்த தமிழரசு என்பவரது தொழுவத்தில் சிறுத்தை ஒன்றின் நடமாட்டம் இருப்பதாக வாட்ஸ்-அப் போன்ற சமூக வளை தலங்களில் தகவல் வைரலானது.

இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News