உள்ளூர் செய்திகள்

சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை

Published On 2023-10-27 09:43 GMT   |   Update On 2023-10-27 09:43 GMT
  • சிறுத்தை ஒன்று மானை துரத்திக்கொண்டு குடியிருப்பு பகுதியை ஒட்டி சென்றதாக தகவல் பரவியது.
  • வனத்துறையினர் இரவு நேரத்தில் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

அறச்சலூர்:

ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள அட்டவனை அனுமன்ப ள்ளி ஊராட்சியில் அறச்ச லூர் மலையை ஒட்டி அமை ந்துள்ள ஓம்சக்தி நகரில் கடந்த சில நாட்க ளுக்கு முன்னர் சண்முக

சுந்தரம் என்பவரது தொழுவத்தி லிருந்த கன்றுக்குட்டியை இரவில் வந்த மர்மவிலங்கு இழுத்துசென்றது.

இதனை அடுத்து வெள்ளி வலசில் மற்றொரு விவசா யியின் ஆட்டுப்பட்டியிலிருந்த ஆடு ஒன்றை இழுத்து சென்றுள்ளது.

இதனால் இச்சம்ப வங்களில் தொடர்பு டைய விலங்கை பிடிக்க வனத்துறையினர் வனப்ப குதியில் கண்கா ணிப்பு கேமராக்க ளை பொருத்தியும், கூ ண்டுகளை வைத்தும் கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு அறச்சலூரை அடுத்த ஊஞ்சப்பாளையம் சாவடி க்காடு பகுதியில் சிறுத்தை ஒன்று மானை துரத்திக்கொண்டு குடியிருப்பு பகுதியை ஒட்டி சென்றதாக தகவல் பரவியது.

இதனை கேள்விப்பட்ட வனத்துறையினர் அங்கு சென்று வனப்பகுதியில் இரவு நேரத்தில் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அவர்களுடன் வெள்ளிவலசை சேர்ந்த மக்களும் தேடினர்.

Tags:    

Similar News