உள்ளூர் செய்திகள்

எலக்ட்ரீசியன் மயங்கி விழுந்து சாவு

Published On 2023-02-03 10:08 GMT   |   Update On 2023-02-03 10:08 GMT
  • ஈரோடு- நசியனூர் ரோட்டில் குமார் மயங்கிய நிலையில் விழுந்து இறந்து கிடந்தார்.
  • இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பவானி:

திருபுவனம் மாவட்டம் கோதன்குளம் பகுதியை சேர்ந்தவர் குமார் (46) எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி திருசாடை என்ற மனைவியும், தினேஷ் பிரபு, லோகேஷ் என்ற 2 மகன்களும், திவ்யதர்ஷினி என்ற ஒரு மகள் உள்ளனர்.

குமார் நசியனூரில் உள்ள ஒரு தனியார் நிறுவ னத்தில் எலக்ட்ரீனாக பணியாற்றி வந்தார். இவர் நிறுவனத்தின் அருகேவீடு வாடகைக்கு எடுத்து தங்கி மாதம் ஒரு முறை சொந்த ஊருக்கு சென்று வருவார்.

இந்த நிலையில் குமார் கடந்த மாதம் சொந்த உருக்கு சென்று விட்டு மீண்டும் நசியனூருக்கு வந்துள்ளார். அவர் தனக்கு இந்த வேலை பிடிக்கவில்லை என கூறி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று ஈரோடு- நசியனூர் ரோட்டில் குமார் மயங்கிய நிலையில் விழுந்து இறந்து கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் அவரது உடலை மீட்டு ஆம்புலன்சு மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அவரது மனைவி திருசாடைக்கு போன் மூலம் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவரது மனைவி சம்பவ இடத்துக்கு வந்து போலீசில் புகார் கொடுத்தார்.

இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

Similar News