உள்ளூர் செய்திகள்

வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண் இணைக்கும் பணி

Published On 2022-09-03 07:02 GMT   |   Update On 2022-09-03 07:02 GMT
  • புன்செய்புளியம்பட்டியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கியது.
  • இதைத்தொடர்ந்து நாளை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் அட்டையில் ஆதார் எண் இணைக்கப்படும்.

பு.புளியம்பட்டி:

ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கியது.

இந்த பணியை பவானிசாகர் சட்டமன்ற தொகுதி எம். எல். ஏ. பண்ணாரி மற்றும் நகராட்சி தலைவர் ஜனார்த்தனன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

புளியம்பட்டி பஸ் நிலையம் முன்பு காந்தி பாலிடெக்னிக் கல்லூரி மாணவ- மாணவிகள் நாட்டு நலப்பணித் திட்டத்தின் மூலம் புளியம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு வாக்காளர் அட்டையில் ஆதார் எண்ணை சேர்ப்பதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் அட்டையில் ஆதார் எண் இணைக்கப்படும் என தெரிவித்தனர். 

Tags:    

Similar News