உள்ளூர் செய்திகள்
சவுடேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு
- செல்லீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு வருகின்றது.
- இந்து சமய அறநிலையத் துறையினர் அளவீடு செய்தனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் செல்லீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு வருகின்றது. இதில் 32 இடங்களில் அத்துக்கள் நடப்பட்டது.
இதேபோல் அந்தியூர் தவி ட்டுப்பாளையம் மார்க்கெட் அருகே உள்ள சவுடேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 1 ஏக்கர் 25 சென்ட் நிலங்கள் இந்து சமய அறநிலையத் துறையினர் அளவீடு செய்தனர்.
இதில் கோவில் நிலங்கள் துணை கலெக்டர் பணி ஓய்வு குப்புசாமி, ஈரோடு ஆலய நிலங்கள் தனி கலெக்டர் சங்கர் கணேஷ், ஆலய நிலங்கள் தாசிர்தர் ஓய்வு பழனிச்சாமி,
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் சீதாராமன், கிராம நிர்வாக அலுவலர் ஓய்வு அழகுராஜா, நில அளவையர் அருள்குமார், ஹரி, பத்ரகாளியம்மன் கோவில் அலுவலர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு அளவீடு செய்யும் பணியினை செய்தனர்.