உள்ளூர் செய்திகள்

புதிய நிலக்கடலை பயிர் சாகுபடி செய்ய மானியம்

Published On 2022-07-18 09:47 GMT   |   Update On 2022-07-18 09:47 GMT
  • மேலும் இந்த ரகமானது அதிக எண்ணை சத்து கொண்ட தாகவும், அதிக விளைச்சல் கொண்ட தாகவும் ஹெக்டருக்கு 4000 முதல் 5000 கிலோ வரை மகசூல் கிடைக்க கூடிய ரமாக உள்ளது.
  • இந்த ரகத்தினை விவசா–யிகள் அனைவரும் மானியவிலையில் வாங்கி விதைத்து பயன் பெருமாறு பவானிசாகர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சரோஜா கேட்டுகொண்டுள்ளர்.

சத்தியமங்கலம்:

பவானிசாகர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

ஆந்திரமாநிலம் கதிரி மாவட்டத்தில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் மூலம் கதிரி லாப்பாக்சி 1812 என்ற புதிய நிலக்கடலை கண்டு பிடிக்கப்பட்டது.

இந்த ரகத்தினை பயிரிட அடி உரமாக தொழு உரமும், 12.5 டன் தழை மற்றும் 30 கிலோ சாம்பல் சத்தினை இடவேண்டும். வரிசைக்கு வரிசை 30 செ.மீ செடிக்கு செடி 10 செ.மீ இடைவெளியில் விதைக்க வேண்டும். விதைத்த 20 நாட்களுக்கு பிறகு 12.5 - 50 - 30 தழை மணி சாம்பல் சத்தினை இடவேண்டும். ஹெக்டருக்கு 12.5 கிலோ நுண்ணூட்ட கலவையை தொழுஉரம் அல்லது மணலில் கலந்து இடலாம்.

பயிர் நட்ட 35-45 நாட்களுக்குள் களை யெடுத்து ஜிப்சம் 400 கிலோ எக்டருக்கு என்ற அளவில் இட்டு மண் அணைக்கவேண்டும். இதனால் மண்ணின் தன்மை இலகுவாகி காய்பிடிப்பு திறன் அதிகமாகிறது.

மேலும் இந்த ரகமானது அதிக எண்ணை சத்து கொண்ட தாகவும், அதிக விளைச்சல் கொண்ட தாகவும் ஹெக்டருக்கு 4000 முதல் 5000 கிலோ வரை மகசூல் கிடைக்க கூடிய ரமாக உள்ளது. இத்தகைய ரகத்தினை பவானிசாகர் வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் புளியம்பட்டி துணை வேளாண்மை விரிவாக்கமையத்திலும் நடப்பு பருவத்திற்கு போதுமான அளவு விதைகள் இருப்பில் உள்ளது.

இந்த விதைகள் 50 சதவீதம் மானியத்தில் விவசா–யிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த ரகத்தினை விவசா–யிகள் அனைவரும் மானியவிலையில் வாங்கி விதைத்து பயன் பெருமாறு பவானிசாகர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சரோஜா கேட்டுகொண்டுள்ளர்.

Tags:    

Similar News