உள்ளூர் செய்திகள்

சென்னிமலை அருகே கணவனை கொலை செய்த பெண் பரபரப்பு வாக்குமூலம்

Published On 2023-07-31 08:54 GMT   |   Update On 2023-07-31 08:54 GMT
  • சென்னிமலை அருகே கணவனை கொலை செய்த பெண் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார்
  • இது குறித்து சென்னி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஈரோடு,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள புதூர் நஞ்சியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலு (63). இவரது மனைவி ஈஸ்வரி (58). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தாராபுரம் மற்றும் தர்மபுரி யில் அவர்களது கணவருடன் வசித்து வருகின்றனர்.பாலுவும், ஈஸ்வரியும் கடந்த 2 மாதங்களுக்கு முன் ஈரோடு மாவட்டம் சென்னி மலை நாமக்கல்பாளை யத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டுக்கு குடி வந்தனர். பாலு அப்பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் வேலை செய்து வந்தார்.

மதுவுக்கு அடிமையான பாலு தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி ஈஸ்வரியை அடித்து துன்புறுத்தி உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு போதை யில் வீட்டுக்கு வந்த பாலு ஈஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஈஸ்வரி வீட்டில் இருந்த அரிவாளால் பாலுவை வெட்டி கொலை செய்தார். பின்னர் அங்கி ருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து சென்னி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று இரவு ஈஸ்வரியை கைது செய்தனர். போலீசார் ஈஸ்வரியிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது ஈஸ்வரி போலீ சாரிடம் கூறும்போது, எனது கணவர் பாலு தினமும் மது அருந்தி விட்டு இரவில் வீட்டுக்கு வந்து என்னை அடித்து துன்புறு த்துவார். இதனால் நான் ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்தேன். இந்நிலையில் நேற்று முன்தினமும் மது அருந்திவிட்டு வந்து என்னை அடித்து து ன்புறுத்தினார். இதனால் ஆத்திரத்தில் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்தேன் என்றார்.இதை அடுத்து ஈஸ்வரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோவையில் உள்ள பெண்கள் மத்திய சிறை யில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News