உள்ளூர் செய்திகள்

போதிய பஸ் வசதி இல்லாமல் படியில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்

Published On 2023-09-22 10:03 GMT   |   Update On 2023-09-22 10:03 GMT
  • மாணவிகள் மற்றும் மாணவர்கள் பஸ்சில் படியில் ஆபத்தை உணராமல் பயணம் செய்து வருகின்றனர்.
  • கூடுதல் பஸ் விடு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றனர்.

தாளவாடி:

தாளவாடி சுற்று வட்டார பகுதியில் 80-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இப்பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் தாளவாடி, சூசைபுரம், மல்லங்குழி, பனக்கள்ளி ஆகிய பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு போதிய பஸ் வசதிகள் இல்லாத காரணத்தால் படியில் தொங்கிய படி ஆபத்தான முறையில் தினந்தோறும் பயணம் செய்து வருவது தொடர் கதையாகி வருகிறது.

இந்த நிலையில் தாளவாடியில் இருந்து சூசைபுரம் வழியாக பனக்கள்ளி நோக்கி சென்ற அரசு பஸ்சில் மாணவிகள் மற்றும் மாணவர்கள் பஸ்சில் போதிய இடம் இல்லாத காரணத்தால் படியில் ஆபத்தை உணராமல் பயணம் செய்து வருகின்றனர்.

இது பற்றி மாணவ- மாணவிகள் கூறும்போது,

காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டு மென அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளிக்கப் பட்டுள்ளதாகவும், இது வரை அதிகாரிகள் எந்த நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என குற்றம் சாட்டினர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பள்ளி மாணவ-மாணவிகளின் நலன் கருதி கூடுதல் பஸ் விடு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News