உள்ளூர் செய்திகள்

ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்துக்கு நிலக்கடலை விற்பனை

Published On 2023-04-20 14:53 IST   |   Update On 2023-04-20 14:53:00 IST
  • அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடைபெற்றது.
  • 89 மூட்டைகளில் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடைபெற்றது.

அந்தியூரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து நிலக்கடலையை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இதில் 89 மூட்டைகள் காய்ந்த நிலக்கடலை காய் குறைந்தபட்சமாக 66 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 75 ரூபாய்க்கும், சராசரியாக 71 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மொத்தம் 89 மூட்டைகளில் 27 குவிண்டால் நிலக்கடலை காய் கொண்டு வரப்பட்டு ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது என விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Tags:    

Similar News