உள்ளூர் செய்திகள்

பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய அதிகாரிகள்.

பட்டா கேட்டு பொதுமக்கள் போராட்டம்

Published On 2023-07-05 14:59 IST   |   Update On 2023-07-05 14:59:00 IST
  • கோடேபாளையத்தில் பட்டா கேட்டு போராட்டம் நடத்தினர்.
  • 2 நாட்களில் இதற்கான உறுதியை ஆவணம் மூலமாக வழங்க வேண்டும் என கூறி அங்கு இருந்து கலைந்து சென்றனர்.

பு.புளியம்பட்டி:

ஈரோடு மாவட்டம் புளி யம்பட்டி அடுத்த தொப்ப ம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கோடே பாளை யத்தில் 12-வது வார்டு பகுதியில் வீடு இல்லாத வர்களுக்கு காலி மனை இடம் கேட்டு பொதுமக்கள் கடந்த ஒரு ஆண்டாக மனு கொடுத்து வருகிறார்கள்.

மேலும் அந்த பகுதி மக்கள் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் தலைமையில் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக பட்டா கேட்டு பெறுவதற்கான முயற்சி மேற்கொண்டனர்.

மேலும் கோடேபாளையத்தில் பட்ட கேட்டு 100-க்கும் மேற்பட்ட வர்கள் போரா ட்டம் நடத்தினர். இதையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்து க்கு வந்து பொது மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.

இது குறித்து அதிகாரி கள் மற்றும் போலீசார் கூறும் போது, நீங்கள் கேட்கக் கூடிய இடம் பாது காப்பானது அல்ல. எனவே மாற்று இடம் தருகிறோம் என்று அதிகாரிகள் உத்தரவாதம் கொடுத்தனர்.

ஆனால் அவர்கள் எங்க ளுக்கு அந்த இடத்தை வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பாரதி ஜனதா கட்சியினர் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் அதிகாரிகள் பல இடங்களில் ஆய்வு செய்து அதிகாரிகள் குறிப்பிட்ட ஒரு இடத்தை ஒதுக்குவதாக உத்திரவாதம் கொடுத்தனர்.

இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் எங்களுக்கு 2 நாட்களில் இதற்கான உறுதியை ஆவணம் மூல மாக வழங்க வேண்டும் என கூறி அங்கு இருந்து கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தில் பா.ஜ.க. ஒன்றிய தலைவர் ஈஸ்வரமூர்த்தி, சுற்றுச்சூழல் பிரிவு மாவட்டத் தலைவர் சக்திவேல், மாவட்ட வர்த்தக அணி துணை தலைவர் சண்முகம் மற்றும் பா.ஜ.க. பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News