உள்ளூர் செய்திகள்

கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணிப்பு

Published On 2022-10-02 10:21 GMT   |   Update On 2022-10-02 10:21 GMT
  • கோசனம் ஊராட்சியில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டத்திற்கு நம்பியூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
  • போதிய அளவு மக்கள் கூட்டம் இல்லாததால் கிராம சபை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நம்பியூர்:

ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோசனம் ஊராட்சியில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டத்திற்கு நம்பியூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

அதில் 25 நபர்களுக்கு குறைவாக பொதுமக்கள் இருந்துள்ளனர். இது குறித்து அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்கள் கூறியதாவது:-

கிராமசபை அறிவிப்பு பற்றி எங்களுக்கு முறையான எந்த தகவலும் கிடைக்கவில்லை. மேலும் கிராமத்தின் குடிநீர் தொட்டிகள் சரியாக சுத்தம் செய்வது இல்லை, தெருவி ளக்குகள் எரிவதில்லை, வீட்டு வரி ரசீது கொடுப்ப தில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை பொது மக்கள் முன்வைத்தனர்.

மேலும் கிராம சபை தொடர்பான கோரிக்கை களை கிராம பொதுமக்கள் கலெக்டருக்கு புகார் மனுவாக அனுப்பி வைக்க உள்ளனர்.

மேலும் பொதுமக்களிடம் போலீசார் மற்றும் நம்பியூர் வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து போதிய அளவு மக்கள் கூட்டம் இல்லாததால் கிராம சபை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News