உள்ளூர் செய்திகள்
வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் கோவில் வேலில் எலுமிச்சம் பழம் குத்தி வழிபாடு
- வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் கோவில் வேலில் எலுமிச்சம் பழம் குத்தி வழிபாடு செய்தனர்
- இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னிமலை,
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள வெள்ளோடு அடுத்து உள்ள பிச்சாண்டாம் பாளையத்தை சேர்ந்த விவ சாயிகள் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரி வித்து நூதன முறையில் வழிபாடு நடத்தினர். இதையடுத்து அந்த பகுதி விவசாயிகள் வாய்காலில் கான்கிரீட் அமைக்க கூடாது. அதை நிறுத்த வேண்டும் என வேண்டுதல் வைத்தும், வெள்ளோடு அண்ணமார் கோவில் மற்றும் வெள்ளோடு கருக்கண்ண மார் கோவி ல்களில் நூதன போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து பிச்சா ண்டாம்பாளைய த்தைச் சேர்ந்த விவசாயிகள் கோவி லில் உள்ள வேலில் எலுமிச்சம் பழம் குத்தி வழிபாடு நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.