உள்ளூர் செய்திகள்
சென்னிமலை பகுதியில் நாளை மின் நிறுத்தம்
- சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
- நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
சென்னிமலை:
சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
இதையொட்டி நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னிமலை டவுன் பகுதி முழுவதும், பூங்கா நகர், பாரதி நகர், சின்ன பிடாரியூர், ஊத்துக்குளி ரோடு,
ஈங்கூர் ரோடு, குமராபுரி, சக்திநகர், பெரியார் நகர், நாமக்கல்பாளையம், அரச்சலூர் ரோடு, குப்பிச்சிபாளையம், திப்பம்பாளையம், அம்மாபாளையம்,
அசோகபுரம், புதுப்பாளையம், ராமலிங்கபுரம், ஒரத்துப்பாளையம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலைபாளையம், வெப்பிலி, கே.ஜி.வலசு, பசுவபட்டி,
முருங்கத்தொழுவு, எம்.பி.என்., நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என பெருந்துறை செயற்பொறியாளர் பி.வாசுதேவன் தெரிவித்துள்ளார்.