உள்ளூர் செய்திகள்

வாய்ப்பாடி ஊராட்சி துணை தலைவர் காத்திருப்பு போராட்டம்

Published On 2023-03-23 09:33 GMT   |   Update On 2023-03-23 09:33 GMT
  • துணை தலைவர் அலுவலகத்தின் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
  • துணை தலைவர் விஜயலட்சுமியிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

சென்னிமலை:

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள வாய்ப்பாடி ஊராட்சி யில் துணை தலைவராக வருபவர் விஜயலட்சுமி என்பவர் இருந்து வருகிறார். இந்த ஊராட்சியில் பணியாற்றி வரும் ஊராட்சி செயலாளர் சிவராஜ்.

இவர் துணை தலைவரின் மின்னணு சாவியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாப்ட்வேர் அப்டேட் செய்ய வேண்டும் என கூறி பெற்றதாக கூறப்படுகிறது.

இந்த சாவியை துணை தலைவர் அவரிடம் பலமுறை கேட்டும் திரும்ப தர வில்லை.

இந்த நிலையில் ஊராட்சி 9-வது நிதி வங்கி கணக்கில் உள்ள தொகையினை துணை தலைவருக்கு தெரியப்படுத்தாமல் ஒப்பந்ததாரருக்கு பண பரிவத்தினை செய்துள்ளார்.

மேலும் துணை தலைவர் விஜயலட்சுமி மின்னணு சாவியை கேட்டார். ஆனால் துணை தலைவரை அலுவ லத்துக்குள் அனுமதிக்காமல் ஊராட்சி செயலாளர் சிவராஜ் அலுவலகத்தினை பூட்டி விட்டு சென்று விட்டதாகவும் கூறப்படு கிறது.

இதை கண்டித்து துணை தலைவர் அலுவலகத்தின் முன்பு திடீரென காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதை பற்றி அறிந்ததும் சென்னிமலை பி.டி.ஓ. குணசேகரன் மற்றும் போலீசார் வாய்ப்பாடி ஊராட்சி அலுவலகம் சென்று போரட்டத்தில் ஈடுபட்ட துணை தலைவர் விஜயலட்சுமியிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதை தொடர்ந்து துணைத் தலைவர் அங்கு இருந்து புறப்பட்டு சென்றார்.

Tags:    

Similar News