உள்ளூர் செய்திகள்

மொபட் மீது வேன் மோதியதில் மூதாட்டி பலி

Published On 2023-10-12 09:53 GMT   |   Update On 2023-10-12 09:53 GMT
  • வேன் ஒன்று மொபட்டின் மீது மோதியது.
  • சிகிச்சை பெற்று வந்த ராமாயி சிகிச்சை பயனின்றி இறந்தார்.

சிவகிரி:

கொடுமுடியை அடுத்த முத்தையன்வலசை சேர்ந்தவர் தங்கமணி (38) கூலி்தொழிலாளி. இவர் தனது மாமியார்கள் பாப்பாள் (75), ராமாயி (70) ஆகியோரை மொபட்டில் அமரவைத்து கொண்டு சிவகிரி அருகே உள்ள வேலாயுதம்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது முத்தையன்வலசில் இருந்து வேலாயுதம்பாளையம் ரோட்டில் வந்த வேன் ஒன்று இவர்கள் சென்று கொண்டிருந்த மொபட்டின் மீது மோதியது.

இந்த சம்பவத்தில் மொபட்டில் சென்று கொண்டிருந்த 3 பேர்களும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களை அக்கம் பக்கம் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ராமாயி மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராமாயி சிகிச்சை பயனின்றி இறந்தார்.

இச்சம்பவம் குறித்து தங்கமணி அளித்த புகாரின்பேரி்ல் சிவகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News