உள்ளூர் செய்திகள்

மூதாட்டி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2022-12-14 09:18 GMT   |   Update On 2022-12-14 09:18 GMT
  • வீட்டில் துளசியம்மாள் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் நசியனூர் கதிரம்பட்டி ரோடு பகுதியை சேர்ந்தவர் துளசியம்மாள் (68). இவரது மகன் திருநாவுக்கரசு நசியனூர் கலவை ஓரம் தெரு பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

துளசியம்மாள் தினமும் மகன் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு பின்னர் இரவில் கதிரம்பட்டியில் உள்ள தனது வீட்டில் தூங்க சென்று விடுவார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக துளசியம்மாள் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார். சம்பவத்தன்று வழக்கம் போல் மகன் வீட்டில் சாப்பிட்டுவிட்டு இரவில் தனது வீட்டிற்கு தூங்க சென்று விட்டார்.

காலை திருநாவுக்கரசு தனது தாயை பார்ப்ப தற்காக அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் உள்ள அறையில் துளசியம்மாள் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரின் முதற் கட்ட விசாரணையில் உடல்நிலை குறைவால் மூதாட்டி தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News