உள்ளூர் செய்திகள்

நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஆய்வு

Published On 2023-09-10 12:48 IST   |   Update On 2023-09-10 12:48:00 IST
  • திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் பணிகளையும் நேரில் ஆய்வு செய்தார்.
  • புதிய தார் சாலை அமைத்துள்ள இடங்களை ஆய்வு செய்தார்.

கோபி:

கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதிகளில் திருப்பூ ர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் டாக்டர்.இள ங்கோவன் பல்வேறு திட்ட பணிகளையும், திடக்க ழிவு மேலாண்மை பணிகளையும் நேரில் ஆய்வு செய்தார்.

திடக்கழிவு மேலாண்மை யில் நுண்உர கூட செயலா க்கம் மைய பணிகளையும், வளமீட்பு மைய பணிகளையும், உயிரி சுரங்க முறை மற்றும் உயிரி எரிவாயு கூட பணிகளை ஆய்வு செய்தார்.

புதிய தினசரி சந்தை வளாகம் கட்டுமான பணிகளையும், மொடச்சூர் வார ச்சந்தை கடைகள் கட்டுமான பணிகளையும், அறிவு சார் மையம் கட்டுமான பணிகளையும் நேரில் ஆய்வு செய்தார்.

புதிய தார் சாலை அமைத்துள்ள இடங்களான சாய் அபிராமி நகர், அழகு நகர், ராம் நகர் மற்றும் அப்துல்கலாம் நகர் ஆகிய இடங்களை ஆய்வு செய்தார்.

திடக்கழிவு மேலாண்மை பணி சிறந்த முறையில் செயல்பட்டு வருவதாக அதிகாரிகளுக்கு பாராட்டும் தெரிவித்தார். திடக்கழிவு மேலாண்மையில் 100 சதவீ தம் அறிவியல் முறைப்படி செயலாக்கம் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி அதற்கு தேவையானவற்றிற்கு செயல்திட்டம் மற்றும் மதிப்பீடு தயாரித்து அனுப்பி வைக்க அறிவுறுத்தியுள்ளார்.

இந்த ஆய்வின்போது நகர்மன்ற தலைவர் என்.ஆர். நாகராஜ், நகராட்சி ஆணையாளர் சசிகலா, பொறியாளர் சிவக்குமார், துப்புரவு அலுவலர் சோழ ராஜ், துப்புரவு ஆய்வாள ர்கள் சவுந்தர ராஜன், நிருபன் சக்ரவர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News