உள்ளூர் செய்திகள்

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்ட குடியிருப்புகளில் மேலாண்மை இயக்குநர் ஆய்வு

Published On 2022-06-28 09:50 GMT   |   Update On 2022-06-28 09:50 GMT
  • கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் அளுக்குளி திட்டப்பகுதியில் கட்டப்பட்டுள்ள 288 குடியிரு ப்புகளை மேலாண்மை இயக்குநர் ஆய்வு செய்தார்.
  • மேலும் குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி மற்றும் அருகாமையில் உள்ள ேரஷன் கடை பற்றிய விபரங்களை மக்களிடம் கேட்டறிந்தார்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 30 திட்டப்பகுதிகளில் 11,890 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு அதில் 1,184 குடியிருப்புகள் முடிவுற்று 997 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டு குடியேற்றப் பட்டுள்ளார்கள்.

பயனாளிகள் சுயமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 7689 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு 6316 கட்டிட பணிகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் மேலாண்மை இயக்குநர் கோவிந்தராவ் கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் அளுக்குளி திட்டப்பகுதியில் கட்டப்பட்டுள்ள 288 குடியிரு ப்புகளை ஆய்வு செய்து ஒதுக்கீடு செய்யப்பட்ட குடியிருப்புதாரர்களிடம் குறைகளை கேட்டறிந்து உடன் சரிசெய்ய அதிகாரி களிடம் அறிவுறித்தினார்.

மேலும் குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி மற்றும் அருகாமையில் உள்ள ேரஷன் கடை பற்றிய விபரங்களை மக்களிடம் கேட்டறிந்தார். பின்னர் ஈரோடு மாநகராட்சி க்குட்பட்ட பவானி சாலை பகுதி திட்டப்பகுதியில் அனை வருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் 336 குடியிருப்புகள் கட்டும் பணிகளைஆய்வு செய்தார்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் பெரும்பள்ளம் ஓடை, கருங்கல்பாளையம் மற்றும் பெரியார் நகர் திட்டப்பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 1072 குடியிருப்புகளை ஆய்வு செய்து குடியிருப்புகளை பயனாளிகளிடம் விரைவில் ஒப்படைக்க வீட்டுவசதி துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் உள்ள ஆலமரத்து மேடு திட்டப்பகுதியில் ஆய்வு செய்து மக்களிடம் கலந்துரையாடி நிலுவை தொகையினை செலுத்தி விற்பனை பத்திரங்களை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுருத்தினார்.

மேலும் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் சுயமாக வீடு கட்டும் திட்டப்பணிகளைஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News