உள்ளூர் செய்திகள்

தரமற்ற உணவு குறித்து புகார் அளிக்க புதிய இணையதளம்-செயலி அறிமுகம்

Published On 2023-05-14 06:45 GMT   |   Update On 2023-05-14 06:45 GMT
  • பொதுமக்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இணையதளம், செயலி மூலம் புகார் அளிக்கலாம்.
  • புகார்தாரர் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.

ஈரோடு:

ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட உணவகங்கள் மற்றும் கடைகளில் பொதுமக்களுக்கு தரமான, சுகாதாரமான உணவு வகைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அரசு உணவு பாதுகாப்பு துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதில் தற்போது உணவு தொடர்பான பொது மக்களின் புகார் நடவடி க்கைகளை எளிதாக்கும் விதமாக விரைவு நடவடி க்கைக்கு ஏதுவாகவும் புதிய இணையதளம் மற்றும் செயலியை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.

இதில் பொதுமக்கள் தங்கள் புகார்களை டைப் செய்யாமல் மிக எளிதாக விவரங்களை தேர்ந்தெடுக்கு ம் வசதியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் உருவா க்கப்பட்ட புதிய இணைய தளம் foodsafety.tn.gov.in மற்றும் கைபேசி செயலி Tnfood safety consumer App பதிவிறக்கம் செய்யப்பட்டு ள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்க விக்னேஷ் கூறும்போது, தரமற்ற உணவு, கலப்படம் உள்ளிட்ட புகார்கள் குறித்த விவரங்க ளை பொதுமக்கள் இதற்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள இணையதளம், கைபேசி செயலி மூலம் புகார் அளிக்கலாம்.

மேலும் புகார்தாரர் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். புகார் அளித்த 24 மணி நேர முதல் 48 மணி நேரத்திற்குள் ஆய்வு நடவடிக்கை உடனடி யாக எடுக்கப்பட்டு புகார் தாரருக்கு ஆய்வறிக்கை அளிக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News