உள்ளூர் செய்திகள்

கேரளா மருத்துவ பிரதிநிதி பலி

Published On 2023-10-18 15:00 IST   |   Update On 2023-10-18 15:00:00 IST
  • கேரளாவுக்கு காரித்ராத் எக்ஸ்பிரஸ் ெரயிலில் சென்று கொண்டிருந்தார்.
  • படிக்கட்டில் நின்று பயணித்த ஸ்ரீஜீத் திடீரென கால் தவறி கீழே விழுந்தார்.

ஈரோடு:

கேரளா மாநிலம் திருச்சூர், மஞ்சாடி சாலை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜித் (30). மருத்துவ விற்பனை பிரதிநிதி. இவர் அலுவலக வேலை காரணமாக சம்பவத்தன்று கர்நாடக மாநிலம் பெங்க ளூருக்கு சென்றிருந்தார்.

பின்னர் தனது நண்பர் களுடன் பெங்களூரில் இருந்து கேரளாவுக்கு காரித்ராத் எக்ஸ்பிரஸ் ெரயிலில் சென்று கொண்டிருந்தார்.

அந்த ெரயில் ஈரோடு ெரயில்வே போலீஸ் எல்லைக்குட்பட்ட ஆனங்கூர் ெரயில்வே யார்டு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ெரயில் படிக்கட்டில் நின்று பயணித்த ஸ்ரீஜீத் திடீரென கால் தவறி கீழே விழுந்தார்.

இதில் படுக்காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு ெரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஸ்ரீஜித்தின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து ஈரோடு ெரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான ஸ்ரீஜித்துக்கு கிருஷ்ணா என்ற மனைவியும், 6 மாத ஆண் குழந்தையும் உள்ளது.

Tags:    

Similar News