உள்ளூர் செய்திகள்

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் வீட்டில் நகை-பணம் திருட்டு

Published On 2023-06-04 07:36 GMT   |   Update On 2023-06-04 07:36 GMT
  • மனைவியுடன் துணி எடுக்க ஈரோடு சென்றார்.
  • நகை மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

பெருந்துறை, 

பெருந்துறை அடுத்த காஞ்சிக்கோவில் கரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (54). இவர் பெருந்துறையில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார்.

இவர் சம்பவத்தன்று அவரது மனைவியுடன் துணி எடுக்க ஈரோடு சென்றார். பின்னர் மீண்டும் மாலை 4 மணியளிவில் வீடு திரும்பினார்.

அப்போது அவர்களது வீட்டின் கதவு திறந்து இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.

அப்போது பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து மாதேஸ்வ ரன் காஞ்சிக்கோ வில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News