உள்ளூர் செய்திகள்

நகை பட்டறை தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

Published On 2023-09-29 09:12 GMT   |   Update On 2023-09-29 09:12 GMT
  • நாகேந்திரன் வீட்டில் வைத்து விஷத்தை குடி த்தார்.
  • வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு ஈ.பி.பி.நகர் ஜனதா காலனியை சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 58). நகைப்பட்டறை தொழிலாளி. இவருக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்து காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டது.

இதனால் அவர் நான் உயிருடன் இரு ந்து என்ன பயன்? என்று புலம்பி வந்தார். அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் தெரிவித்து வந்தனர்.

சம்பவத்தன்று நாகேந்திரன் வீட்டில் வைத்து விஷத்தை குடி த்தார். பிறகு அவர் வேலை செய்த நகை ப்பட்டறையில் சென்று தூங்கினார்.

இந்த நிலையில் நாகேந்திரனை தேடி நகைப்பட்டறைக்கு சென்ற அவரது மகன் சந்திரபிரகாஷ் தனது தந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அப்போது தான் விஷத்தை குடித்து விட்டதாக நாகேந்திரன் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அவரை சந்திரபிரகாஷ் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றார். அங்கு நாகேந்திரனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

எனினும் சிகிச்சை பலனளி க்காமல் நாகேந்திரன் உயிரிழந்தார். இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News