உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்ற கணவன், மனைவி கைது

Published On 2023-04-27 09:52 GMT   |   Update On 2023-04-27 09:52 GMT
  • கஞ்சா விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.
  • போலீசார் கணவன், மனைவி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

ஈரோடு:

ஈரோடு டவுன் போலீசார் முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் பஸ் நிறுத்தம் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த ஒரு ஆண், ஒரு பெண்ணை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர்கள் ஈரோடு மரப்பாலம் நடராஜா தியேட்டர் பின்புறம் உள்ள குடிசை மாற்று வாரியக்குடியிருப்பை சேர்ந்த ஆனந்த் (37), அவரது மனைவி கவுரி (35) என்பது தெரியவந்தது.

மேலும் அவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதற்காக ஒன்றரை கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கணவன், மனைவி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து ரூ.15 ஆயிரம் மதிப்பிலான ஒன்றரை கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News