உள்ளூர் செய்திகள்

இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2023-11-28 09:16 GMT   |   Update On 2023-11-28 09:16 GMT
  • வீட்டில் கீதா திடீரென தூக்குபோட்டு கொண்டார்.
  • மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு அடுத்துள்ள லக்காபுரம் புதுவலசு பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (33). இவரது மனைவி கீதா (28). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

கணவன், மனைவி இருவரும் லக்காபுரத்தில் உள்ள தறிப்பட்டறையில் வேலை பார்த்து வந்தனர்.

இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை வீட்டில் கீதா திடீரென தூக்குபோட்டு கொண்டார்.

இதையறிந்த சசிகுமார் உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே கீதா இறந்து விட்டதாக தெரிவித்து ள்ளார்.

இதுகுறித்து, கீதாவின் தந்தை பழனிசாமி (50) அளித்த புகாரின் பேரில் மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News