உள்ளூர் செய்திகள்

பெண் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2023-05-07 08:03 GMT   |   Update On 2023-05-07 08:03 GMT
  • கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
  • விஜயா வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் குருவரெட்டியூர் சாணா திக்கல் மேட்டை சேர்ந்தவர் சித்தையன் (36).

இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பவானி தொட்டி பாளையத்தை சேர்ந்த மாதப்பன் மகள் விஜயா (32) என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இதில் மூத்த மகன் கடந்த 6 மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். இதை த்தொடர்ந்து கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று விஜயா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து விஜயாவின் தந்தை மாதப்பன் அம்மா பேட்டை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News