உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் நலத்திட்ட உதவிகள் பெற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்

Published On 2023-04-12 08:21 GMT   |   Update On 2023-04-12 08:21 GMT
  • நலத்திட்ட உதவிகளை எளிதில் பெற முடியும்.
  • கிராம நிர்வாக அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

ஈரோடு:

பெருந்துறை வேளாண் உதவி இயக்குனர் குழந்தைவேலு, தாசில்தார் சிவசங்கர் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விவசாயிகள் தங்கள் நிலத்தின் விபரங்களை 'கிரெய்ன்ஸ்' இணையதளத்தில் பதிவு செய்வதன் மூலம் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை மற்றும் வணிகம், பட்டு வளர்ச்சி, கூட்டுறவு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட, 13 துறைகளின் நலத்திட்ட உதவிகளை எளிதில் பெற முடியும்.

அதற்காக விவசாயிகள் தங்களது ஆதார் எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வங்கி கணக்கு புத்தகம், நில உரிமைச்சான்று, கணினி சிட்டா ஆகிய ஆவணங்களுடன் விலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும்

எனவே பெருந்துறை தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் அந்தந்த பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News