உள்ளூர் செய்திகள்
- சின்னதுரை தனது மனைவியுடன் வியாபாரம் தொடர்பாக திருப்பூருக்கு சென்று விட்டார்
- வீட்டின் அருகில் இருந்த ஒரு குடிசையில் தூக்குப்போட்டு தற்ெகாலை செய்து கொண்டார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள வீரப்பம் பாளையம் பாறை கிணறு பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது 2-வது மகன் நீத்தீஷ்குமார் (22). இவர் சிவில் என்ஜினீயரிங் படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று சின்னதுரை தனது மனைவியுடன் வியாபாரம் தொடர்பாக திருப்பூருக்கு சென்று விட்டார்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த நீத்தீஷ்குமார் நான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டின் அருகில் இருந்த ஒரு குடிசையில் தூக்குப்போட்டு தற்ெகாலை செய்து கொண்டார்.
இது குறித்து அரச்சலுர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.